- எடப்பாடி
- விஜய பிரபாகரன்
- சிவகாசி
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- பாவதி தோப்
- திமுக
- விருதுநகர்
- தின மலர்
சிவகாசி: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசி பாவடி தோப்பில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சிக்காலத்தில் பட்டாசு தொழிலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பட்டாசு ஆலை அதிபர்களை என்னிடம் அழைத்து வருவார்.
நானும் பிரச்னையை தீர்த்து வைத்துள்ளேன். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. பட்டாசு தொழில் மிகவும் நசிந்து போய் விட்டது. ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பட்டாசுக்கு உள்ள பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் டீசல், பெட்ரோல், காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
The post விஜயபிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பிரசாரம் appeared first on Dinakaran.